திருச்சிராப்பள்ளி, ஜூலை 22- திருச்சி மாவட்டத்தில் 5ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட கால மாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் மணல் எடுத்து தொழில் செய்து வருகின்றனர். இந் நிலையில் மண்ணச்சநல்லூர் தாலுகா மாதவபெருமாள் பஞ்சா யத்தில் செயல்பட்டு வந்த மணல் மாட்டு வண்டி ரீச் கடந்த பிப்ரவரி 10ம் தேதி மூடப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. பின் னர் ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் ஜூன் 10ம் தேதி திருவெறும் பூர் தாலுகா கீழமுல்லக்குடியில் மணல் மாட்டு வண்டி ரீச் திறக்கப் பட்டது. மணல் மாட்டு வண்டி ரீச்சை மூடுவதற்கு சில சமூக விரோதிகள் முயன்று வந்தனர். இதுகுறித்து மணல் மாட்டு வண்டி சங்கம் சார் பில் ஆட்சியர் சிவராசுவிடம் கடந்த ஜூன் 17ம் தேதி புகார் மனு அளிக் கப்பட்டது. மேலும் இதுகுறித்து பொதுப்பணித் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மணல் ரீச்சில் இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையை காரணம் காட்டி மணல் ரீச்சை மூடப்பட்டது. தனிநபர் பிரச்சனையை காரணம் காட்டி ரீச்சை மூடியது நியாயமற்றது. இத னால் ஆயிரக்கணக்கான குடும் பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டது. எனவே தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு மணல் ரீச் உடனே திறக்க வலியுறுத்தி சிஐ டியு மணல் மாட்டு வண்டி தொழிலா ளர்கள் திங்களன்று ஆட்சியர் அலு வலகம் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிஐடியு மணல் மாட்டு வண்டி தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். போராட் டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, சிஐடியு மணல் மாட்டு வண்டி சங்க தலைவர் சேகர், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி னர். போராட்டத்தில் சங்க நிர்வாகி கள் மணிகண்டன், ரமேஷ், நொச்சி யம் குணா, பாலாஜி, காந்திபுரம் சதீஷ், பாப்பாக்குறிச்சி ராஜா உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்சியர் சிவராசு தலை மையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, மண்ணச்ச நல்லூர், லால்குடி, திருவெறும்பூர் ஒன்றியத்தில் உள்ள மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அந்தந்த பகுதி கிராம நிர்வாக அதி காரிகளிடம் வழங்க வேண்டும். அவற்றை பொதுப்பணித்துறை அதி காரிகள் பதிவு செய்து கொண்டு ஆன்லைன் மூலம் மாட்டு வண்டி களில் மணல் அள்ள அனுமதி வழங்கு வது என முடிவானது. மேலும் லால்குடி பகுதியில் மாட்டு வண்டி மணல் ரீச் திறக்க விரைவில் உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என முடிவானது. இதனையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர்.