tamilnadu

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

பொன்னமராவதி, ஜூலை 8-  புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனுடைய குழந்தைக ளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக நடமாடும் ஊர்தி மூலம் நடைபெற்றது. முகாமை வட்டார வள மைய மேற் பார்வையாளர் செல்வக்குமார் தொடங்கி வைத்தார்.  சிறப்பாசிரியர் தனலட்சுமி வரவேற்றார்.  மாற்றுத்திறனுடைய குழந்தை களுக்கான உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஸ்மார்ட் கார்டு பற்றி ஆலோசனை வழங்கினர். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெகன்முருகன், உடல் இயக்க நிபு ணர் தங்கவேல், பள்ளி ஆயத்த பயிற்சி மைய ஆசிரியர் பொன்னம்மாள், உதவி யாளர் அம்சவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பாசிரியர் ரபேல்நான் சிபிரியா நன்றி கூறினார்.

;