tamilnadu

img

மரக்கன்று வழங்கும் விழா

புதுக்கோட்டை, ஏப்.12-திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி சார்பில் விதைக்கலாம் அமைப்போடு இணைந்து மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விழங்கும்விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்வியாண்டுக் கான நிறைவு நாளை மாணவர்களுக்கு பள்ளி முதல்வர்கோடையில் ஒரு ஹோம் ஒர்க் என்ற நிகழ்வாக மாணவர்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகளை விதைக்கலாம் அமைப்பினர் வழங்கினர். மரக்கன்றுகளை பராமரித்து வளர்க்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப் படும் எனவும் அறிவிக்கப்பட்டது. விழாவில் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்திதலைமை வகித்தார். மக்களிசைப் பாடகர்கள் செந்தில்கணேஷ்- ராஜலெட்சுமி, விதைக்கலாம் அமைப்பு மலையப்பன், கஸ்தூரி ரங்கன், பள்ளி ஆலோசகர் அஞ்சலிதேவிதங்கம் மூர்த்தி, துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, ராஜாமணி, ரம்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;