tamilnadu

சீர்காழி மற்றும் கும்பகோணம் முக்கிய செய்திகள்

புத்தூர் கல்லூரியில் உலகத் தாய்மொழி தினம்

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா நடைபெற்றது. தமிழ்துறை தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். மாணவி ஆர்த்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் லெட்சுமி சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.  முனைவர் கணேசன் தலைமையில் தற்கால சூழ்நிலையில் தமிழ் வளர்கிறதா விழுகிறதா என்ற தலைப்பில் மாணவர்கள் கலந்து கொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் அனைத்து துறை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.

கிராம நலப் பணியில் மாணவ- மாணவிகள்

கும்பகோணம், பிப்.24-  கும்பகோணத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டக் குழுமம் மற்றும் தனியார் கல்லூரி மாணவ- மாணவிகள், இணைந்து கள்ளப்புலியூர் கிராமத்தை சுகாதாரம் உள்ளிட்ட பல்நோக்கு விழிப்புணர்வு கிராமமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை கள்ளப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் முருகன் தொடங்கி வைத்தார். குளக் கரைகளை சுத்தம் செய்யும் பணி, மக்களுக்கு கைத்தொழில் கற்றுத் தருதல், மரக் கன்று நடுதல், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு, பெண்கள் தற்காப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை மாணவ- மாணவிகள் மேற்கொள்கின்றனர். வரும் 27 ஆம் தேதி வரை இப்பணித் திட்ட முகாம் நடைபெறுகிறது. 

குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம் 100 பேர் மீது வழக்கு  

திருச்சிராப்பள்ளி, பிப்.25- தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண் டும். இந்த சட்டத்தை திரும் பப்பெற மத்திய அரசை வலி யுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி இஸ்லாமியர்கள் கடந்த 17-ந் தேதி இரவு முதல் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தொடர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். 9-ம் நாளாக செவ்வாய் அன்றும் போராட்டம் நீடித்தது. இந் நிலையில் அங்கு அனுமதி யின்றி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருவ தாக 30 பெண்கள் உள்பட 100 பேர் மீது தில்லைநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர், பிப்.25-  திருவாரூர் மாவட்ட விவ சாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 27-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள் ளது. மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவ சாய சங்க பிரதிநிதிகள் தவறா மல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.