tamilnadu

img

தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை, ஜூலை 27-  மாணவர்களின் கல்வி உரிமை யைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு எதிராக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட் டையில் சனிக்கிழமையன்று கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கையெ ழுத்து இயக்கத்திற்கு மாதர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார். பொருளாளர் எஸ். பாண்டிச்செல்வி, நகரச் செயலாளர் காயத்திரி, துணைச் செயலாளர் கௌரி, அரிமளம் ஒன்றியச் செயலாளர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநி லக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாக ராஜன், எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற் குழு உறுப்பினர்கள் எம்.உடையப்பன், எஸ்.சங்கர், சி.அன்புமணவாளன், ஒன் றியச் செயலாளர்கள் த.அன்பழகன், எல்.வடிவேல், டி.லட்சாதிபதி, தரணி முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

;