tamilnadu

தஞ்சை அரசு மருத்துவ மனையில் தூய்மைப் பணி

தஞ்சாவூர், நவ.15- உலக தர தினமான நவம்பர் 14 - அன்று தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வரு வாய் அலுவலர் ந.சக்திவேல் மாஸ்க், க்ளவுஸ், குப்பை சேகரிப்பு பை, துடைப்பான் ஆகியவற்றை வழங்கி தூய் மைப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்து பார்வை யிட்டார். மருத்துவக் கல்லூரி செவிலிய மாணவி யர்கள், சுகாதாரப் பணியா ளர்கள் என 200 க்கும் மேற் பட்டோர் பணியில் ஈடுபட்ட னர். நிகழ்ச்சியில் மருத்து வக் கல்லூரி முதல்வர் (பொ) ரவிக்குமார், நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், தஞ்சாவூர் வட் டாட்சியர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;