tamilnadu

35 காவல் ஆய்வாளர்களுக்கு எஸ்.பி. நோட்டீஸ்

சட்டவிரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுக்காத 35 காவல் ஆய்வாளர்களுக்கு எஸ்.பி. நோட்டீஸ்

புதுக்கோட்டை, ஜூலை 31- புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட  காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த அருண் சக்திகுமார் சென்னை உளவுப் பிரிவுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டதை யடுத்து கடந்த 12 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கோயம்புத்தூர் சட்ட  ஒழுங்கு ஆணையராக பணிபுரிந்த பாலாஜி சர வணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நியமிக்கப்பட்ட நாளி லிருந்தே, அவரது தனிப்படை மாவட்டம் முழு வதும் உள்ள 38 காவல் நிலைய எல்லை க்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் கள்ள த்தனமாக மது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எஸ்பியின் தனிப்படை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்நிலையில் கஞ்சா, மது விற்பனை, மணல் கடத்தல், சீட்டாட்டம் உள்ளிட்ட சட்ட  விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல முறை கூறியும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள காவ ல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் 35 பேருக்கு மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் அந்த நோட்டீசில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவ டிக்கை எடுக்காத உங்கள் மீது நாங்கள் ஏன்  துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் இதற்கு மூன்று நாட்களுக்குள் சம்ப ந்தப்பட்ட நபர்கள் முறையாக பதில் அளிக்க வில்லை என்றால் பதிலளிக்காத காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  நோட்டீசில் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்று 15 நாட்களுக்குள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத  35 காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வா ளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சக  காவலர்களிடையே அச்சத்தையும் பொது மக்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றுள்ளது.