தஞ்சாவூர்: தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பாக, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க தஞ்சாவூர் கோட்டத் தலைவர் (பொறுப்பு) எம். முருகேசன், செயலர் கே. பாலசுப்ரமணியன், பொருளாளர் ஆர். கருப்பசாமி மற்றும் சங்கத்தினர் கலந்து கொண்டனர். “கிராமிய அஞ்சல் ஊழியர்கள் அனைவருக்கும் அரசு ஊழியர் என்ற அந்தஸ்து வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழு கமலேஷ் சந்திரா குழுப் பரிந்துரைப்படி கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 12, 24, 36 ஆண்டுகள் பணி நிறைவு செய்கிற நேரத்தில் நிதி வரையறை உயர்வு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வு மூலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.