tamilnadu

img

பேராவூரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை ரூ.3 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சார்பதி வாளர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மனோகரன் தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சார்பதிவாளர் வாசுதேவனிடம் 1.92 லட்சமும், பத்திர எழுத்தர் சுதாகரிடம் 1.03 லட்சமும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அலுவலகத்தில் உள்ள பத்திரங்க ளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.