tamilnadu

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்

புதுக்கோட்டை, ஏப்.3-புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகாரி லதாபேபி தலைமையிலான பறக்கும் படையினர் புதுக்கோட்டை, கருவேப்பிலான் கேட் பகுதியில் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனைமேற்கொண்டதில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.36 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும், 38 பண்டல்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணியிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து இராமேஸ்வரம் வடக்கு 2-ம் வீதியைச் சேர்ந்த ஏ.அனந்தராமனிடம்(58) விசாரணை மேற்கொள்ளப்பட்டது.



;