tamilnadu

img

செயல் அலுவலராக பொறுப்பேற்பு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் தலைமை எழுத்தராக பணியாற்றிய வி.சிவலிங்கம் பதவி உயர்வு பெற்று கும்பகோணம் அடுத்துள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்கு செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். திருநாகேஸ்வரம் பேரூராட்சி  செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட வி.சிவலிங்கத்தை சக ஊழியர்கள், பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்து வரவேற்றனர். இவர், கடந்தாண்டு வீசிய கஜா புயலின் போது பேராவூரணி பகுதி மக்களுக்கு அரசு பேரிடர் நிவாரணத் திட்டங்களையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளையும் போர்க்கால  அடிப்படையில் செய்து கொடுத்து பணியாற்றி மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.