அறந்தாங்கி, செப்.27- புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், மீமிசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக நிதியளிப்பு பொதுக்கூட்டம் புதனன்று மாலை கடைவீதியில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஏ.அமீர் தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் மீமிசல் பேருந்து நிலையம் கட்டுமானப்பணியை உடன் துவக்க வேண்டும். நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலபட்டினத்திற்கு கனரா வங்கி கிளை துவக்க வேண்டும். கோபாலபட்டினம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும். அரசுப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கழிவறை, வாட்டர் சப்ளை இல்லாத நிலையை போக்கி குடிநீர் வசதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், சி.சுப்ரமணியன், ஒன்றியச்செயலாளர் நெருப்பு எஸ்.முருகேஷ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.