தஞ்சாவூர், ஜூலை 9- பேராவூரணியில் இருந்து மாவடு குறிச்சிக்கு செல்லும் வழியில் உள்ள ஆனந்த வல்லி வாய்கால் சாலையை சீரமைக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து, மாவடுகுறிச்சி ஊராட்சிக்கு, ஆனந்த வல்லி வாய்கால் கரை ஓரத்தில் உள்ள சாலை 6 கி.மீ தூரம் சேதமடைந்த நிலையில் உள்ளது. ஆவணத்திலிருந்து பழையநகரம், மாவடு குறிச்சி, பொன்-காடு, பேராவூரணி, கழனி வாசல் வழியாக கொரட்டூர் சென்றடையும் இச்சாலை சுமார் 12 கிமீ நீளமுள்ளது. ஆனந்த வல்லி வாய்க்காலின் இருபுறமும் மாறி, மாறி அமைக்கப்பட்டுள்ள சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. குறிப்பாக மாவடுகுறிச்சி சாலை பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது. பழைய நகரம், மாவடுகுறிச்சி, பொன்-காடு பகுதியில் ஏறத்தாழ 5,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி, தனி யார் பேருந்துகள், நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் தினந்தோறும் இச்சாலை யில் சென்று வருகின்றன. பழையநகரம், மாவடு குறிச்சி, பொன்-காடு இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல ஆயிரம் பேர் தினமும் ஆனந்தவல்லி வாய்கால் கரை ஓரத்தில் உள்ள சாலையின் வழியாகவே பேராவூரணிக்கு வந்து சென்று செல்கின்றனர். ஆனந்தவல்லி வாய்கால் கரை ஓரத்தில் உள்ள சாலை பொன்-காட்டில் இருந்து மாவடு குறிச்சி, பழையநகரம் வரை 6 கி.மீ தூரம் மிகவும் மோசமாகவும், மண் சாலை போல் உள்ளது. மேலும் சாலை சேதமடைந்து குண்டுங்குழியுமாக போக்குவரத்திற்கு பய னற்ற வகையில் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள், கப்பிகள் பெயர்ந்து பள்ளமாக உள்ளது. அதிகாரிகளி டம் பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை. இதனை உடன் சரி செய்து பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.