திருவாரூர் ஆக.9- அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அத்தியாவசிய பொருட்களை விடுபடாமல் வழங்க வேண்டும். மண்ணெண்ணெய் அளவைக் குறைக்கக் கூடாது. அனைத்து வேலை நாட்களிலும் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருக்காரவாசல், கோமல் அங்காடி முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ரகுபதி தலைமையேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் கோரிக்கைளை விளக்கி உரையாற்றினார். கிளைச் செயலாளர் எஸ்.முருகையன், மாதர் சங்க ஒன்றிய தலைவர் என்.ரேணுகா, கே.அம்மாசி(விதொச), ஏ.கேசவன்(விச), பெண்கள் கட்சி கிளைச் செயலாளர் கே.விஜயா மற்றும் திருக்காரவாசல், கோமல், ராதநங்கை, அண்ணாமன்றம் கிராம வாசிகள் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.