பெரம்பலூர், ஜூலை 28- தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் வட்ட பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலை வர் கே.பழனிவேல் தலைமை வகித் தார். துணைத் தலைவர் எம்.அன்பழ கன், இணைச் செயலர்கள் பி.நீல மேகன், எஸ்.ராமசுவாமி, என்.ராமசாமி, அமைப்பு செயலர் பி.மின்னல் கபீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலர் மு.சுப்ர மணியன், மாநிலத் தலைவர் சி. கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில், 2009-இல் நேரடி பணி நியமனம் செய்த தொழில்கல்வி தொழி லாளர்களில் இளையவர்கள், மின் பாதை ஆய்வாளர் பதவி உயர்வு பெற்ற நிலையில், வணிக உதவியாளர் பதவி யில், பதவி உயர்வின்றி உள்ள மூத்த பணியாளர்களுக்கு உபரி வணிக பதவி வழங்கிட வேண்டும். மின் வாரி யத்தில் காலியாக உள்ள 28 ஆயிரம் பணியிடங்களை தொழில்கல்வி படித்தோரை கொண்டு நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநிலச் செயலர் ஆர். முத்துசாமி, வட்ட அமைப்பு செய லர்கள் எஸ்.கண்ணதாசன், என்.பால சுப்ரமணியன், வட்டச் செயலர் ஏ. சின்னசாமி, வட்ட பொருளாளர் ஆர்.சங்கர், மகளிரணி செயலர் கே.செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்ட துணைத் தலைவர் ஜி.முருகானந்தம் வரவேற்றார். பெரம்பலூர் கோட்டத் தலைவர் ஜி.ரமேஷ் நன்றி கூறினார்.