tamilnadu

img

புதுப்பட்டினம் பொதுகுளத்தை தூர்வார கோரிக்கை

சீர்காழி, மே 7-கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் வண்ணான்குளத்தை தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைத்தெருவையொட்டி ஒரு ஏக்கர் பரப்பளவில் வண் ணான்குளம் என்ற பெயரில் ஊராட்சி பொதுக்குளம் உள்ளது. கடந்த 20 ஆண்டுக்கு முன்பு இந்தக் குளம் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டேயிருக்கும் அளவுக்கு பொதுமக்களால் ஆழப்படுத்தி தூர்வாரி பாதுகாக்கப்பட்டது. இந்தக் குளம் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ததது. இக்குளத்தை ஒட்டியுள்ள புதுமண்ணியாறு பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் சென்று பின்னர் குளத்தில் தேங்கிய நீர் வடியும் அளவிற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. இக்குளத்திற்கு அருகே ஈமக்கிரியை மண்டபமும் அதனருகே உயர்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. இந்த வண்ணான்குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தினால் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வகையில் கால்நடைகளுக்கு நல்ல குடிநீர் கிடைக்க வாய்ப்பாகவும் அமையும். இந்நிலையில் தொடர்ந்து பல வருடங்களாகத் தூர்வாராமல் கிடக்கிறது. இந்தக் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.