திருச்சிராப்பள்ளி, நவ.15- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மருங்காபுரி வட்ட பேரவை கூட்டம் வியாழனன்று எம்.கல்லுப்பட்டியில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தவிச மருங்காபுரி வட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட தலைவர் ராமநாதன் துவக்கவுரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் தியாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் அழகர்சாமி, வி.தொ.ச.அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கர், சாமிக்கண்ணு, கார்த்திகைகண்ணன், கண்ணன், மலைச்சாமி, சின்னச்சாமி, மரிக்கொழுந்து, ரமேஷ், மல்லிகா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பாரபட்சம் இல்லாமல் பயிர்க டன் வழங்க வேண்டும். தோட்டக்கலை வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை, உரம், பூச்சி மருந்து மற்றும் மரக்கன்றுகள் பாரபட்சம் இல்லாமல் வழங்க வேண்டும். வாடகை கட்டிடத்தில் இயங்கும் கூட்டுறவு பால் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புறநகர் மாவட்ட செயலாளர் சிதம்பரம் நிறைவுரையாற்றினார்.