tamilnadu

img

வேன் ஓட்டுநர்களுக்கு நிவாரணம்

அறந்தாங்கி, மே 15- ஊரடங்கால் அறந்தாங்கியில் 50 நாட்களாக வேலையிழந்து தவித்து வரும் 200-க்கும் மேற்பட்ட வேன், கார் ஓட்டுநர்களுக்கு   அரிசி பை மற்றும் காய்கறிகள் நிவாரணமாக வழங்கப்பட்டது. ரோட்டரி சங்கத் தலைவர் தங்கதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் முத்துகணேஷ் முன்னிலை வகித்து நிவாரணப் பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆதிமோகனகுமார், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் முரளிதரன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் அன்னை கன்ஸ்ட்ரக்சன் தாமஸ், ராயல் சூப்பர் மார்க்கெட் அப்துல் சலாம், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.