சீர்காழி, ஜூன் 17- டெண்டர் விட்டு 6 மாதங்கள் ஆகியும் புளியந்துறை சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பொதுமக்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புளியந்துறை யிலிருந்து புதுப்பட்டினம் வரை செல்லும் 2 கிமீ தூர தார்ச்சாலை கடந்த 10 வருடங்களாக மேம்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சாலை யில் கருங்கல் ஜல்லிகள் பரவிக் கிடக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாக னங்களில் செல்லும் போது அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். பெண்கள் மற்றும் முதியோர் சாலையில் கிடக்கும் ஜல்லிகளில் கால் இடறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இந்த சாலையை மேம்படுத்தக் கோரி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத் தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் நெடுஞ்சாலை மற்றும் கிராமச் சாலைகள் (நபார்டு) திட்டத்தின் கீழ் புளி யந்துறையிலிருந்து புதுப்பட்டினம் வரை உள்ள சாலை யை மேம்படுத்துவதற்கு கடந்த ஜனவரி மாதம் முதல் தேதி யன்று டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் டெண்டர் விட்டும் இதுவரை சாலைப் பணி துவங்கவில்லை. எனவே பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இனியாவது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை உடனடி யாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புளியந்துறை கிராமமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.