மக்கள் தொடர்பு முகாம்
புதுக்கோட்டை, ஜூன்.14- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோட்டம், மணமேல்குடி வட்டம், கோ-பழங்குளம் கிராமத்தில் 25-ம் தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெறவுள்ளது. முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனு செய்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் வீடுகள் நாசம்
நாகப்பட்டினம், ஜூன்14- நாகப்பட்டினம் வ.உ.சி.தெருவில் வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் சில வீடுகள் எரிந்து நாசமாகின. வீடுகளில் அனைத்து பொருள்கள் தீக்கிரையாகின. தகவல் அறிந்து, நாகப்பட்டினம் தீயணைக்கும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆட்சியர் சீ.சுரேஷ்குமார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரணப் பொருள்களை வழங்கினார்.