tamilnadu

புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

தென்னைநார்த்  தொழிற்சாலையில் தீ விபத்து

யில் தீ விபத்து  புதுக்கோட்டை, ஜூலை 2- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாச லைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர் மேலக்கரும்பிரான் கோட்டையில் தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வரு கிறார். இந்நிலையில்  உலர வைக்கப்பட்டிருந்த தென்னை நாரில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி தென்னை மட்டை மற்றும் எந்திரங்களில் பரவியது. இந்த தீ விபத்தில் சுமார் 25 லட்சம் மதிப்பிலான தென்னை நார்கள், தென்னை மட்டை மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமாகின. இதனைத்தொடர்ந்து, ஆலங்குடி, கீரமங்கலம் மற்றும் புதுக்கோட்டை தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பிடிக்க மின்கசிவு காரணமாக அல்லது யாரேனும் பற்ற வைத் தார்களா என ஆலங்குடி காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

மருத்துவர்கள் தின விழா

தஞ்சாவூர், ஜூலை 2- டாக்டர் பி.சி.ராயின் பிறந்த நாளான ஜூலை 1-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவர்கள் தின விழாவுக்கு தலைமை நிர்வாக அதிகாரி பாபு மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகி யோர் தலைமை வகித்து மருத்துவர்களின் சேவை, அன்றா டம் மருத்துவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினர். மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பள்ளி மாணவ- மாணவி கள் கலந்து கொண்டு மருத்துவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 

;