tamilnadu

img

வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மண்ணச்சநல்லூர், ஜூலை 2- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கொணலை ஊராட்சி காந்தி நகர் பகுதி மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு  மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புறம் போக்கில் குடியிருந்தவர்கள், கொணலை அருகில் காந்தி நகர் பகுதியில் இடம் ஒதுக்கி தரப்பட்டது. அதில் 36 குடும்பங்களுக்கு பல போராட்டங்களுக்கு பின்னர் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் மீதி இருபது நபர் களுக்கு பட்டா வழங்கவில்லை. எனவே பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி  பாதிக்கப் பட்டவர்கள் ஒன்றிணைந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  இதுகுறித்து தகவலறிந்த காவல் ஆய்வாளர் இமானு வேல் ராயப்பன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி பதினைந்து நாட்களில் பட்டா வழங்க ஆவன செய்வதாக கூறியதை அடுத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.