சிபிஎம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் போராட்டம்
திருவாரூர், நவ.26- திருவாரூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், நகர செயலாளர் எம்.பாலசுப்ரமணியன், கொரடாச்சேரி ஒன்றியக்குழு உறுப்பினர் ஆ.மணியன் ஆகியோர் தலைமையேற்றனர். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரி முத்து உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.சாமியப்பன், எஸ்.ராமசாமி, கொர டாச்சேரி ஒன்றியக்குழு உறுப்பினர் என். மலர்குமார் உட்பட நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டனர். போராட்டத் தின் நிறைவாக வட்டாட்சியர் எம். நக்கீ ரனை சந்தித்து 800 க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர்.
மன்னார்குடி
மன்னார்குடி வட்டாட்சியர் அலுவல கம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமையேற்றார். மூத்த தலைவர் கே.டி.கந்தசாமி, கோட்டூர் ஒன்றிய செய லாளர் எல்.சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா உரை யாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் டி.சந்தி ரா, மூத்த உறுப்பினர் ஆர்.தாமோதரன், நகரக்குழு உறுப்பினர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். வட்டாட்சியர் என்.கார்த்தியிடம் 400 மனுக்கள் அளிக்கப்பட்டன.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் ஆர்ப்பாட்டத்திற்கு மன்னார்குடி ஒன்றிய செயலாளர் எம்.திருஞானம் தலைமையேற்றார். கூத்தா நல்லூர் நகர செயலாளர் கே.டி.கே.நூருமுகமது முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி, ஒன்றிய நகர உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டாட்சியர் ஜி.மலர்கொடியை நேரில் சந்தித்து 500 க்கும் மேற்பட்ட மனு அளிக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொ ண்டம் காந்தி பூங்கா முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு கட்சி ஜெயங் கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம் தலைமை வகித்தார். எ.பூபாலன் எஸ்.குமார், எ.பல்கீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். மணிவேல், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.மகாராஜன், மாவட்ட குழு உறுப்பினர் எ.தங்கராசு தான். பழூர் ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து காந்தி பூங்காவில் இருந்து ஊர்வலமாக தாலுகா அலுவலகம் சென்று கோரிக்கை மனுவை கொடுத்தனர். அரியலூர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சி அரி யலூர் ஒன்றிய செயலாளர் துரை அரு ணன் தலைமையில் ஜீவா, கே.தங்க மணி, கே.சுப்பிரமணியன், கே.கிருஷ் ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துரை சாமி எம்.இளங்கோவன் ஆகியோர் கோரிக்கை உரை நிகழ்த்தினர். திருமா னூர் ஒன்றிய செயலாளர் ஆர்.புனிதன், மாவட்டகுழு உறுப்பினர் ஆர்.சிற்றம் பலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். கந்தர்வகோட்டையில் ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் பேசினார். இலுப்பூரில் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் பேசினார்.
ஆலங்குடி
ஆலங்குடியில் ஒன்றியச் செயலா ளர் எல்.வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.துரைச்சந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பெரி.குமாரவேல் ஆகியோர் பேசினர். திருமயத்தில் ஒன்றியச் செயலாளர் சி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். அரிமளம் ஒன்றியச் செயலாளர் ஜி.நாக ராஜன் முன்னிலை வகித்தார். மணமேல்குடியில் ஒன்றியச் செயலாளர் கரு.ராமநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அந்தந்த வட்டாட்சியரிடமும் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி அனைவரும் கோரிக்கை மனு அளித்தனர். போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் அதிகமா னோர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்
சி.பி.எம். நாகை ஒன்றியக்குழு, திருமருகல் ஒன்றியக்குழு சார்பில், நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சி.பி.எம். நாகை ஒன்றியச் செயலா ளர் பி.டி.பகு தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி கோரிக்கை விளக்கவுரை யாற்றினார். நிகழ்வில் திருமருகல் ஒன்றியச் செய லாளர் எம்.ஜெயபால், நாகை நகரப் பொறுப்புச் செயலாளர் சு.மணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், எம்.சுப்பிரமணியன், ப.சுபாஷ்சந்திரபோஸ், எம்.பெரிய சாமி, கே.செந்தில்குமார், வி.தொ.ச. ஒன்றியச் செயலாளர் எஸ்.என்.ஜீவாரா மன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
திருக்குவளை
சி.பி.எம். கீழையூர் ஒன்றியம், தலை ஞாயிறு ஒன்றியம் சார்பில் திருக் குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சி.பி.எம். கீழையூர் ஒன்றியச் செயலா ளர் எம்.முருகையன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.அப்துல் அஜீஸ், வி.தொ.ச. மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேதாரணியம்
வேதாரணியம் ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம். வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் மா.முத்துரா மலிங்கம், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கோவை. சுப்பிரமணி யன் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர்
சி.பி.எம். கீழ்வேளூர் ஒன்றியக்குழு சார்பில், கீழ்வேளூர் ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம். கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.என். அம்பிகாபதி, என்.எம். அபுபக்கர், எம்.செல்வராஜ், எஸ்.சுபாதேவி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரூர்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுக்கும் போராட்டம் சிபிஐ(எம்) ஒன்றிய செயலாளர் ராஜா தலை மையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்போடு துணை வட்டாட்சியர் பிரபாகரிடம் குடிமனை பட்டா கேட்டு 61 மனுக்கள் கொடுக்கப்பட்டன.