tamilnadu

img

தடை செய்த சுருக்குமடி வலையை பயன்படுத்துவதை கண்டித்து போராட்டம்

தரங்கம்பாடி,  ஜூலை 10- நாகை மாவட்டம் தரங்கம் பாடியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் கிராமங்களை கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெள்ளி யன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. சீர்காழி, கூழையாறு உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவ மக்கள் கலந்து கொண்ட போராட்டத்தில்  கடல் வளங்களை பாது காக்கவும், மீன் வளத்தை பெருக்கவும் அரசினால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை, இரட்டை மடி வலை, அதிவேக மோட்டார் இயந்திரம் பொருத்தப்பட்ட படகு மூலம் மீன் பிடி தொழில் செய்வதை தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட வை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 5 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.