tamilnadu

img

திருச்சி ஆயுதத் தொழிற்சாலை சங்க தலைவர் தோழர் மு.சரவணன் காலமானார்.....

திருச்சி:
திருச்சியைச் சேர்ந்த தொழிற்சங்க தலைவர் தோழர் மு.சரவணன் பிப்ரவரி 7 ஞாயிறன்று காலமானார்.

தோழர்  மு.சரவணன் திருச்சி ஆர்டினன்ஸ் பேக்டரி எம்ப்ளாயிஸ் யூனியன் தலைவராகவும் (OFTEU) ஜேசிஎம்  2 ஆம்நிலை உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பிப்ரவரி  7 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகலில் காலமானார். தோழர்  மு.சரவணன் இளம் வயதில் திருச்சி மாவட்டத்தில் மாணவர் சங்கம், வாலிபர் சங்கத்தில் முழுநேர ஊழியராக தீவிரமாக செயல்பட்டவர். பாதுகாப்புத் துறையில் பணியில் சேர்ந்ததும் அங்கும் தொழிலாளர் பிரச்சனைகளுக்காக பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவரு மாவார்.  சிறந்த பேச்சாளர். இவரது மறைவுச் செய்தி அறிந்ததும் திருவரம்பூர் ஒன்றியம் பூலாங்குடி  காலனி துப்பாக்கி நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர், புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில்  அஞ்சலி செலுத்தப்பட்டது.  மறைந்த  தோழரது இறுதி நிகழ்ச்சி இன்று  (பிப்ரவரி 8) பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது.

;