tamilnadu

img

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

தஞ்சாவூர், ஏப்.7-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிவாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பயிற்சி வகுப்பை உதவித் தேர்தல் அலுவலர் மற்றும் முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியர் அ.கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். தேர்தல்கண்காணிப்பு அலுவலர்கள் சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் செ.ஸ்டெல்லா ஞானமணி பிரமீளா, மகளிர்திட்ட மாவட்ட அலுவலர் கு.இந்துபாலா ஆகியோர் முன் னிலை வகித்தனர். வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி, தேர்தல் துணை வட்டாட்சியர் யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுவது, அஞ்சல் வாக்குகளை அளிப்பது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. 

;