tamilnadu

விளாத்திகுளம் அருகே போலீஸ்காரர் தற்கொலை

தூத்துக்குடி,ஜூன் 27 தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இருதயராஜ் மகன் கெளரிசங்கர்(33). இவர் தருவைக்குளம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஜெனிபா (27), தூத்துக்குடி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், வியாழனன்று காலை அவரது மனைவி 2 குழந்தைகளையும் பள்ளிக்கு வேனில் அனுப்புவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியே இருந்த கெளரி சங்கர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த அவரது மனைவி இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.