tamilnadu

இணையதளம் மூலம் கவிதை, பேச்சுப் போட்டிகள்: அறம் மக்கள் நலச் சங்கம் ஏற்பாடு

திருச்சிராப்பள்ளி, மே 12- அறம் மக்கள் நலச்சங்க பொதுச்செயலா ளர் எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திருச்சியை தலைமையிடமாக கொண்டு அறம் மக்கள் நலச்சங்கம் செயல்பட்டு வரு கிறது. அறம் மக்கள் நலச்சங்கம் ஏழை, எளி யோருக்கு உதவி, கல்வி உதவித்தொகை, பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்துதல் போன்ற பணிகளை செய்து வருகிறது.  இந்நிலையில் அறம் மக்கள் நலச்சங்க நிறுவன தலைவர் டாக்டர் சு.ராஜாவின் 47வது பிறந்தநாள் விழா மற்றும் அறம் மக்கள் நலச் சங்கத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா வையொட்டி திறமை விழா போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மகாகவி பாரதியார், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், காமராஜர், அப்துல் கலாம், அன்னை தெரசா ஆகியோர் குறித்து கவிதை போட்டி, சுபாஷ்சந்திரபோஸ், வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, டாக்டர் சு.ராஜா, மகாத்மா காந்தி, பகத்சிங், இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர், கருணாநிதி, நம்மாழ்வார் ஆகி யோர் குறித்த பேச்சுப்போட்டி,  மகாத்மாகாந்தி, சுபாஷ்சந்திர போஸ், வ.உ.சி, முத்துராமலிங்கதேவர், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, டாக்டர் சு.ராஜா, பகத்சிங் குறித்த கட்டுரை போட்டி, கொரோ னாவிற்கு முன். கொரோனாவிற்கு பின் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, கொரோனா விழிப்புணர்வு குறித்த ரங்கோலி போட்டி, 20 நிமிடத்தில் இருக்குமாறு குறும் படம், பாட்டுப்போட்டி, பலகுரல் போட்டி, நட னப்போட்டி ஆகியவை நடைபெறுகிறது. கொரோனா பரவரை தடுக்க சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் அனைத்தும் இணையதளம் மூலமாக நடைபெறும்.

இதில் 6 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் பங்கேற்க லாம்.  தங்களது படைப்புகளை ar-amtv2020@gmail.cHm என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்கள் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும். அவர்கள் 75581 60007, 75581 90007 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். போட்டிக ளில் வெற்றி பெறுபவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்படும்  என அவர் அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.