tamilnadu

img

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கிடக் கோரி மனு

கும்பகோணம் ஜூன் 28-  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா இன்னம்பூர் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் புளியம்பாடி கிராமத்தில் புதிதாக தண்ணீர் தொட்டி ஒன்று அமைத்து தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புளியம்பாடி கிளை சார்பாக ஊராட்சி தனி அலுவலர் ராஜ்மோகனிடம் மனு கொடுக்கப்பட்டது. கூட்டத்தின் போது புளியங்குடி கிளை பொறுப்பாளர் பாலகுரு மற்றும் வாலிபர் சங்கத்தினர் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.