தஞ்சாவூர் ஜூன்.7- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தமிழ்நாடு மெட்ரிக் மற்றும் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில துணை பொதுச் செயலாளரும், குமரப்பா பள்ளி தாளாளருமான முனைவர் ஜி.ஆர். ஸ்ரீதர் பேசினார். பள்ளி அறங்காவலர்கள் மா.ராமு, மா.கணபதி, ஆனந்தன், அஸ்வின் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியை வினிதா வரவேற்றார். பள்ளி முதல்வர் ஆர்.சுரேஷ் நன்றி கூறினார்.