tamilnadu

மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

திருச்சிராப்பள்ளி: கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்கவும், மேலும் பரவாமல் இருப்பதற்கு மக்கள் தனிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் செவ்வாய் கிழமை மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருச்சி காந்தி மார்க்கெட்டில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிட பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் காய்கறிகளின் விலையும் அதிக அளவு உயர்ந்தது. இருந்த போதும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர்.