திருச்சிராப்பள்ளி, ஜூலை,23- தொழிலாளி ஓய்வு பெறும்போதே வருங்கால வைப்பு நிதி தொகை, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், தொழிலாளியிடம் பிடிக்கப்பட்ட தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். 1.9.2010க்கு முன் ஓய்வு பெற்றோர் குடும்ப வாரிசுக்கு 15 சத வீத ஊதிய உயர்வு அரியர்ஸ் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தி ஸ்டேட் டிரான்ஸ்போர்ட், டிரான்ஸ்போர்ட் கார்ப்ப ரேசன்ஸ் ரிடையர்டு எம்ப்ளாயீஸ் வெல்பேர் அசோ சியேசன் சார்பில் செவ்வாயன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள போக்குவரத்து துறை பொதுமேலாளர் அலுவலகம் முன் ஓய்வூதியர்கள் சங்கு ஊதியும், தாரை, தப்பட்டை வாசித்தும் நூதன முறையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கோவிந்தராஜன் தலைமை வகித்தார். கிருஷ்ணசாமி துவக்கவுரையாற்றினார். போராட்டத்தை விளக்கி சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட தலைவர் சின்னசாமி, பொருளாளர் நடராஜன், புதுக் கோட்டை மண்டல தலைவர் லோகநாதன், மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூ தியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை பொதுமேலாளரிடம் வழங்கினர்.