தரங்கம்பாடி, ஆக.26- நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறை ஆய்வாளர் பத்மநாத செல்வி தலைமைவகித்தார். முகாமில் முதியோர் ஓய்வு ஊதியம், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் பன்னீர்செல்வம், கிராம நிர்வாக உதவியாளர் சோமசுந்தரம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.