ஒரே நேரத்தில் கொரோனா மற்றும் இன்ஃபுளூயன்சாவால் பாதிக்கப்பட்டு திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
இளைஞருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல உடல்நல கோளாறும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞரின் மாதிரியை ஆய்வு செய்ததில் அவருக்கு கொரோனா, இன்ஃபுளூயன்சா இரண்டும் இருந்தது தெரியவந்துள்ளது.இது தமிழ்நாட்டில் இன்ஃபுளூயன்சாவால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாகும்