தஞ்சாவூர், ஜூலை 10- அகில இந்திய விவசாயிகள் போராட்ட தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வெள்ளியன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன், மாவட்ட செயலாளர் என்வி.கண்ணன், மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், தமிழ் தேசிய முன்னணி சி.முருகேசன், சமவெளி விவ சாயிகள் இயக்கம் சு.பழனிராசன், மக்கள் அதிகாரம் காளியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பன்னீர் செல்வம், திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி, தஞ்சை என்.குருசாமி, வர்த்தகர் சங்கம் நசீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம், விவசா யிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம், மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு அவசர சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி பிரதமருக்கு அனுப்புவது என்ற முடிவின்படி தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சம் கையெழுத்துக்களை பெற்று பிரதமருக்கு அனுப்புவது, இதுகுறித்து 25 ஆயிரம் துண்டு பிரசுரம் வெளியிட்டு மக்களுக்கு வீடுகள் தோறும் விநியோ கிப்பது, ஜூலை 27 ஆம் தேதி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகளுடைய வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது உள்ளிட் டவை முடிவு செய்யப்பட்டது. அகில இந்திய விவ சாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. ஒருங் கிணைப்பாளராக என்வி.கண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.