கும்பகோணம், நவ.29- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் வட்டம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாபநாசம் வட்டம் தேவனோடை கும்பகோணம் வட்டம் கொத்தங்குடி மற்றும் திருவிடைமருதூர் வட்டத் தில் மாட்டு வண்டி தொழிலா ளர்கள் மணல் அள்ள தனி மணல் குவாரி திறக்க கோரி வெள்ளியன்று சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் மாட்டு வண்டியுடன் தொழி லாளர்கள் முற்றுகை போரா ட்டம் நடத்த திட்டமிட்டனர் இதையடுத்து கும்பகோ ணம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் வட்டாட்சியர் தலை மையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெய பால், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சா.ஜீவபாரதி விவசாயத் தொழிலாளர் சங்க மாநி லக்குழு உறுப்பினர் நாகரா ஜன் சிஐடியு துணைத்தலை வர் ஏ.செல்வம் ஒன்றிய செய லாளர் பி.ஜேசுதாஸ் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் சங்கை யன் கோவிந்தராசு, லட்சும ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சார்பில் தேவனோடை பகுதியில் மணல் குவாரி திறக்க கோரி ஒரு வருடமாக போராடி வரு கிறோம். ஏற்கனவே இரண்டு முறை குவாரி திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது இது எங்க ளின் வாழ்வாதார பிரச்சனை. எனவே உடனடியாக தேவ னோடை பகுதியில் குவாரி திறப்பு குறித்து உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் மேலும் கொத்தங்குடி மற்றும் திருவிடைமருதூர் பகுதியில் மாட்டு வண்டி மணல் அள்ள குவாரி திறக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் எனத் தெரிவித்தனர். கொத்தங்குடி பகுதியில் மாட்டு வண்டி மணல் குவாரி திறப்பதற்கு மாநில சுற்றுச் சூழல் ஆணையத்திற்கு முன்மொழிவு அனுப்பப் பட்டுள்ளது. அனுமதி அளித்தவுடன் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் திருவிடைமருதூர் பகுதியில் மாட்டு வண்டி குவாரி திறக்க இடம் ஆய்வு செய்து கனிமவளத் துறைக்கு அறிக்கை அனுப்பப்படும் காவிரி வடிநில பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கார ணமாக குவாரிகள் அனைத் தும் மூடப்பட்டுள்ளன. வட கிழக்குப் பருவமழை முடிந்த வுடன் உத்தேசமாக வருகிற டிசம்பர் 20-ல் தேவன் ஓடை குவாரியில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்படும் தஞ் சாவூர் சுரங்கவியல் மற்றும் கண்காணிப்பு கோட்டம் செயற்பொறியாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மாட்டு வண்டி தொழி லாளர்கள் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.