கும்பகோணம், மே 11- ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாத சம்பளத்தை வழங்கிட தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆனால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனமான ஏஆர்ஆர் சீவல், மைதீன் புகை யிலை ஆகிய தொழிற்சாலைகளில் ஆண், பெண்கள் என ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் ஊரடங்கு உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளத்தை வழங்கிட உத்தரவு விடுமாறு கும்பகோணம் கோட்டாட்சியரிடம் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சிஐடியு மாவட்ட பொருளாளர் எம்.கண்ணன், ஆட்டோ தொழிலாளர் சங்க கௌரவத் தலைவர் கே.செந்தில்குமார், ஆட்டோ சங்க நகர செயலாளர் ஜி.கார்த்திகேயன் மற்றும் ஏஆர்ஆர் மைதீன் தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சென்று மனு கொடுத்தனர். இதையடுத்து கும்பகோணம் கோட்டாட்சியர், உடனடி யாக சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகிகளை தொலைபேசி யில் தொடர்பு கொண்டு தொழிலாளர் சங்கத்துடன் பேசி சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இல்லையேல் அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என அறிவுறுத்தினார்.