tamilnadu

சீர்காழி ரேஷன் கடைகளில் புது டீல் மூலம் புதுவகை ஊழல்

சீர்காழி, ஆக.2- சீர்காழி ரேஷன் கடை ஊழியர்கள் 20  கிலோ இலவச அரிசி வாங்காத குடும்ப  அட்டைதாரர்களுக்கு புது டீல் ஏற்ப டுத்தி உள்ளார்கள். அதன்படி 20 கிலோ  இலவச அரிசிக்கு பதிலாக 4 கிலோ கோ துமை, 2 கிலோ சீனி தந்து தமிழ்நாட்டி லேயே புது வகையான ஊழலை செய்து  வருகிறார்கள்.  20 கிலோ அரிசி வாங்காத வர்களுக்கு 4 கிலோ கோதுமை, 2 கிலோ  சீனி தர வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு செய்யவில்லை. ரேஷன் கடை ஊழியர்களே புது டீலை உரு வாக்கி மக்களிடம் கொண்டு சேர்த்து  லட்சக்கணக்கான ரூபாயை மாத ந்தோறும் கல்லா கட்டுகிறார்கள். ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கு இவ்வளவு அரிசி, கோதுமை, சீனி, துவ ரம்பருப்பு என்று ஒதுக்கீடு செய்து அதன்படி தான் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் எப்படி உபரியாக கோ துமை, சீனி கிடைக்கும் என்று ஆச்ச ரியப்படுகிறீர்களா? எல்லாம் எடை மோசடியில் தான் சாத்தியமாகிறது. பொது மக்களுக்கு தரும் சீனி, கோது மை, அரிசி, துவரம்பருப்பு போன்ற வை எடை குறைவாக வழங்கப்படு கிறது. 2 கிலோ சீனியில் 150 கிராம் குறைத்து தான் எடை போட்டு வழங்கப்ப டுகிறது. 20 கிலோ அரிசியில் 2 கிலோ குறைத்து 18 கிலோ தரப்படுகிறது. இதே போன்று 1 கிலோ கோதுமை, துவரம் பருப்பு வாங்கினால் 100 கிராம் குறைத்து 900 கிராம் தான் இருக்கும். இதன் மூலம் உபரியாக கோதுமை, துவரம் பருப்பு, சீனி, அரிசி, ரேஷன் கடைகளில் இருக்கிறது. இதை முறை  கேடாக கள்ள மார்க்கெட்டில் விற்பனை  செய்கிறார்கள். புது டீல் உரு வாக்கி பண்டமாற்று முறை செயல்படு த்தப்படுகிறது. சீர்காழியில் சில பணக்காரர்கள் இலவச அரிசி வாங்கும் ரேஷன் கார்டு வைத்திருந்தும் அரிசி வே ண்டாம் எனக் கூறி புது டீல் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். தமிழக அரசு, அரிசிக்கு பதில் பாதி யளவு கோதுமையை வாங்கிக் கொள்ள லாம் என அறிவித்தது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் யாருக்கும் கோ துமை தராமல் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் 2 கிலோ கோதுமை தந்து  மக்களை ஏமாற்றி வருகிறார்கள். சிலரு க்கு மூன்று கிலோ கோதுமை தரப்படு கிறது. தங்களுக்கு வேண்டிய நபர்க ளுக்கு மட்டும் 2 மாதம் என்ற பாகுபாடு இல்லாமல் மாதந்தோறும் 5 கிலோ, அல்லது 3 கிலோ கோதுமையை வாரி வழங்கி வருகிறார்கள். தற்போது மக்கள் அரிசியை விட கோதுமையை அதிகம் விரும்புவதால் மாதத்திற்கு ஒருநாள் அதுவும் 2 மணி நேரம் மட்டும் கோதுமை ரகசியமாக தரப்படுகிறது. குறைவான ஸ்டாக் தான் கோதுமை வருகிறது என்று கூறி கோது மையை பதுக்கி 20 கிலோ அரிசி வாங்கா தவர்களுக்கு கோதுமை தரப்படும் கொ டுமை தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று சீர்காழி நகர்வாழ் மக்கள் கோரிக்கை வைத்து ள்ளனர்.