tamilnadu

img

அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

தஞ்சாவூர் ஒன்றியம், புதுமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தேசிய அறிவியல் தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  அறிவியல் அறிஞர் சர்.சி.வி.இராமன், இராமன் விளைவை, 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி உலகிற்கு அறிவித்த தினம், தேசிய அறிவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையாசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான மாலதி பேசினார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர் சி.வி.இராமன் முகஅமைப்பு கொண்ட முகமூடி  வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் லெ.முருகன் செய்திருந்தார்.