தரங்கம்பாடி, ஜூன் 18- நாகை மாவட்டம் தரங்மம்பாடி வட்டாட்சியர் அலு வலகத்தில் கலால்துறை உதவி ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. இதில் விசலூர், திருவிடைக்கழி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். வட்டாட்சியர் சுந்தரம், ஆர்.ஐ பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலாஜி, ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.