tamilnadu

வாலிபர் கொலை: 2 பேர் கைது

தரங்கம்பாடி, மே 14-நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு கிராமத்தை சேர்ந்த ராஜாராமன் மகன் சதீஷ்குமார் (30). இவருக்கும், அப்பராசபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகள்கலைமதி (28) என்பவருக்கும் கடந்த 5 மாதம் முன்பு திருமணம் நடந்தது. இதன்பின் சில நாளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ்குமார், அப்பராசபுத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்குஅவரைக் கண்ட ஆத்திரத்தில் கலைமதி கல்லால் அடித்தும்,அவரது தந்தை நாகராஜ் கத்தியால் சதீஷ்குமாரை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் இதுகுறித்த புகாரில் பொறையாறு காவலர்கள் வழக்குப் பதிந்து கலைமதி, நாகராஜை கைது செய்தனர்.