tamilnadu

img

தரங்கம்பாடி பள்ளியில் நவீன தொடுதிரை பயிலகம்

தரங்கம்பாடி, ஆக.30- நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள சந்திரபாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி யில் நவீன தொடுதிரை பயிலகம்( ஸ்மார்ட் கிளாஸ்) வெள்ளியன்று துவக்கப்பட்டது. பெட்ராக் தொண்டு நிறுவன நிதியுதவியில் அமைக்கப்பட்ட வகுப்பறையை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.  தலைமையாசிரியர் இரவி, பெட்ராக் திட்ட மேலாளர் சத்தியசீலன், தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான் சைமன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இராமன், பொருளாளர் பாண்டுரங்கன், முன்னாள் ஊரா ட்சி தலைவர் செ ல்வம், மீனவ பஞ்சாய த்தார்கள் கலந்து கொண்டனர். நிறை வாக ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினார்.