tamilnadu

img

நலச் சங்கம் சார்பில் மே தின விழா

திருச்சிராப்பள்ளி, மே 6-திருச்சி சண்முகாநகர் நலச்சங்கம் சார்பில் மே தின விழாபுதனன்று நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். தமுஎகச மாநில உதவி தலைவர் நந்தலாலா சிறப்புரையில், தமிழகத்தில் தற்போது சாதி மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. சாதியை கடந்தவர்களால் தான் இந்த சமூகம் பயன்பட்டது. இந்த சமூகம் இயங்குவது அறிவாளிகளால் அல்ல. அறிவாளிகளை கொண்டாடுபவர்கள், நல்லவர்களை கொண்டாடுவதில்லை. ஆனால் நல்லவர்களுக்கு உள்ள அறிவால் தான் இந்த உலகம் இயங்குகிறது. தொழிலாளர்கள் நல்லா இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்றார்.விழாவில் பொருளாளர் வேலாயுதம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பெல் மருத்துவமனை ஊழியர் கஜேந்திரனின் மேஜிக் ஷோ நடைபெற்றது. முன்னதாக சங்க செயலாளர் ராஜமாணிக்கம் வரவேற்றார். சங்க செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் நன்றி கூறினார்.

;