tamilnadu

img

மக்கள் கோரிக்கை  இயக்கம் மாதர் சங்கம் முடிவு  

திருச்சிராப்பள்ளி: திருச்சி திருவெறும்பூர் துவாக்குடிமலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மகேஸ்வரி தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலாளர் மல்லிகா சிறப்புரையாற்றினார்.  மாநாட்டில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். முதியோர் பென்சன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் தலைவராக மகேஸ்வரி, செயலாளராக சாகிராபானு, பொருளாளராக சந்திரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாரியம்மாள் நன்றி கூறினார்.