tamilnadu

img

வீட்டு வரி உயர்வை திரும்ப பெறுக!

திருச்சிராப்பள்ளி, ஜூலை 9- திருச்சி மாநகராட்சி கடந்த 3 ஆண்டு களுக்கு முன் தேதியிட்டு பலமடங்கு உயர்த்தியுள்ள வீட்டுவரி உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தியும், 65 வார்டில் உள்ள அடிப்படை பிரச்சனை களுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய் அன்று திருவெறும்பூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், பகுதிக்குழு உறுப்பினர்கள் தனபால், பத்மநாபன், கதிரேசன், கண் ணன் ஆகியோர் பேசினர். கிளை செய லாளர்கள் ஜேக்கப், தஸ்தகீர், பிரகாஷ், நாகூர்மைதீன், செல்வராஜ் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் திருவெறும்பூர் தாசில்தார் ரபீக்அஹமதுவிடம் 300 மனுக்களை வழங்கினர்.