திருச்சிராப்பள்ளி, ஜூலை 3- திருச்சி மாநகராட்சி வீட்டு வரியை பல மடங்கு கடுமையாக உயர்த்தி யுள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக்குழு சார்பில் செவ் வாயன்று ஏர்ப்போர்ட் பகுதியில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் விஜயேந் திரன் தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற் குழு உறுப்பினர் சம்பத், பொன்மலை பகுதிக்குழு செயலாளர் கார்த்தி கேயன் ஆகியோர் பேசினர். பகுதிக் குழு உறுப்பினர்கள், கிளைச்செயலா ளர் குமார், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காட்டூர்
இதேபோன்று காட்டூர் பகுதிக்குழு சார்பில் கைலாஷ்நகர் பேருந்து நிறுத் தம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கதிரேசன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செய லாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சி.பாண்டியன், லெனின், காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். நிர்வாகி அமல்ராஜ் நன்றி கூறினார்.