கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, நவ.17- கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்ததாவது. சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கபீர் புரஸ்கார் விருதிற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலு வலகம், மாவட்ட விளையாட்டரங்கம் புதுக்கோட்டையில் பெற்றுக் கொள்ளலாம். மேற்படி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள் 26.11.2019 அன்று மாலை 5 மணிக்குள் புதுக் கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலு வலகத்தில் ஒப்படைக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
,சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்
திருச்சிராப்பள்ளி, நவ.17- தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட 6 வார்டுகளில் சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இப்பணிகளுக்கான துவக்க நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் வளர்மதி, உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இளநிலை செயற்பொறியாளர்கள் பாலமுருகன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்பணிகள் 1-வார்டு நைட் சாயில் டெப்போ ரோடு, 2வது வார்டு சித்திரை வீதிகள், 3, 4 வது வார்டுகளில் காந்தி ரோடு பகுதிகள், 5வது வார்டு கணபதி நகர் மெயின் ரோடு, குறுக்கு தெரு, பெரியார் நகர் மெயின் ரோடு, குறுக்கு தெரு, 6வது வார்டு கீழ கொண்டையம் பேட்டை மெயின் ரோடு திருவெண்ணை நல்லூர் ஆகிய பகுதிகளில் நடை பெற உள்ளன.
குவாரி புகை மூட்டத்தால் சாலை விபத்து
அரியலூர், நவ.17- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் சாலையில் கல்லாதூரில் ஜல்லி கலவை குவாரி உள்ளது. அந்த குவாரி இயங்கும் போது வெளி வரும் புகை மூட்டத்தால் சாலை போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்து வருகிறது. இந்த புகை மூட்டம் காரணமாக பல சாலை விபத்துகள் நடந்துள்ளன. 5-க்கும் மேற்பட்ட உயிர்ச் சேதங்கள் நிகழ்ந்துள் ளன. இவற்றினை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.