இருசக்கர வாகனத்தில் திடீர் தீ
அறந்தாங்கி, ஜூன் 17- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தின கோட்டையைச் சேர்ந்த முகமது மன்சூர். இவர் தனது தாயா ருடன் திங்களன்று வீட்டுக்கு செல்லும் வழியில் அவர்களது இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை அறியாமல் அவர்கள் சென்று கொண்டி ருந்த போது அவ்வழியே சென்றவர்கள் இதுகுறித்து தெரி வித்தனர். உடனே லாகனத்தை நிறுத்தி தீயை அணைக்க முயன்றனர். தொடர்ந்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
பொறையாறு அருகே சாலை விபத்து பெண் உட்பட 4 பேர் பலி
தரங்கம்பாடி, ஜூன் 17- நாகை மாவட்டம் பொறையாறு அருகே ஆனைக்கோயில் கிராமத்தை சேர்ந்த இளையராஜா மகன் ஆதித்யன்(22), ராம மூர்த்தி மகன் ஆதிஸ்(20), ஜீவா மகன் மாரிமுத்து(20) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் காரைக்காலில் இருந்து திருக்கடையூர் நோக்கி வந்துள்ளனர். அப்போது ஒழுகை மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த ஆம்னி பேருந்து இவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்திற்கு காரணமான ஆம்னி பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வரு கின்றனர். இதனிடையே ஞாயிறன்று இரவு திருவிடைக்கழியிலுள்ள விடுதி ஒன்றில் காப்பாளராக பணியாற்றிய சண்முகவள்ளி (31), காப்பகத்தில் படிக்கும் ஸ்ரீமதி(10), நர்மதா(16) ஆகியோ ருடன் இரு சக்கர வாகனத்தில் கணவருடன் 4 பேரும் மயி லாடுதுறை நோக்கி சென்ற போது திருக்கடையூர் ஆர்ச் அருகே பின்புறமாக வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த சண்முகவள்ளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழி யில் உயிரிழந்தார்.
தண்ணீருக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து சிறுமி பலி
புதுக்கோட்டை, ஜூன் 17- புதுக்கோட்டை அருகே வைத்தூரில் குடிநீர் பிடிப்ப தற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்துக்குள் சனிக்கிழமை யன்று சிறுமி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். வைத்தூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. எனினும், போதுமான அளவுக்கு குடிநீர் வராததால் பெரும் பாலான வீடுகளில் பைப்படியில் பள்ளம் தோண்டி அதற்குள் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை பெய்த மழைக்கு மேற்படி பள்ளத்தில் மழைநீர் நிரம்பி இருந்தது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த சந்திர சேகர் மகள் பவதாரணி(3), பள்ளத்துக்குள் தவறி விழுந்து இறந்துவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
புதுக்கோட்டை, ஜூன் 17- புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீப் கொள்முதல் பருவம் 2018-19 முன்னிட்டு நெல் அறுவடை தொடங்கியுள்ளதால் விலை வீழ்ச்சி பாதிப்பிலிருந்து காக்கும் வகையில் மாவட்டத் தில் ஏற்கனவே 15 நேரடி நெல் கொள்முதல் திறக்கப்பட் டுள்ளன. தற்போது கறம்பக்குடி தாலுகா காட்டாத்தி, மண மேடை மற்றும் கந்தர்வகோட்டை தாலுகா வெள்ளாளவிடுதி கிராமங்களில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.