தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.2.09 கோடியில் கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் முடி காணிக்கை மண்டபத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சிய மீ.தங்கவேல் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று குத்து விளக்கேற்றினார்.