tamilnadu

img

‘நலமுடன் வாழ்க’ நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை: இயற்கை மருத்துவம் சார்ந்த ‘நலமுடன் வாழ்க’ நூல் வெளியீட்டு விழா புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் திங்கள்கிழமை வெளி யிடப்பட்டது. விழாவிற்கு மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை நிறுவனர் ந.தினகரன் தலைமை வகித்தார். நூலின் முதல்பிரதியை வெளியிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, இன்றைய காலகட்டத்தில் இயற்கை மருத்துவம் என்பது மிக முக்கியமானது. நூலாசிரியர் ஆன்விக்டோரியா ஆங்கில மருத்துவராக இருந்தும் இயற்கை மருத்துவம் குறித்து நூல் எழுதி இருப்பது வரவேற்புக் குறியது. பாராட்டுக்குறியது என்றார். ஓய்வுபெற்ற நீதிபதி  சாதர்பால், பங்குத் தந்தை யு.சவரிமுத்து, ஆதப்பன், சீக்கர்ஸ் இயக்குநர் சுடர்கொடி, ச.மத்தியாஸ், ஆ.சாமுவேல் நூலின் பிரதிகளைக் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினர். ச.ஆரோக்கியசாமி, அ.மணவாளன், நிலவை பழனியப்பன், வேதரத்தி னம், எம்.வீரமுத்து, ஜெயா, செல்வக்குமார், புதுகை புதல்வன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். முடிவில் பஞசாப் மாநில வன வாதுகாப்பு அலுவலர் கீதாஞ்சலி கூறினார்.

;